Saturday, December 29, 2012

.தூரத்தில் தேடாதே



ஏன் பிறப்பெடுத்தேன்
என்று கலங்கும் மனமே
ஏழ்பிறப்பிலு முன்
பிறப்புதானிங்கு சிறப்பே...
நீட்டிமுடக்கும் கால்களிரண்டு
நிமிர்ந்து நின்றிடும் முதுகெழும்பு
போட்டிவளர்த்திடும் புத்தறிவு
போதாமைக்கு கண்களிரண்டு...
வானத்து விடிவெள்ளியென்ன சிறப்பு
வாழ்க்கைக்குன் நம்பிக்கைதான் திறப்பு
கானகத்தை கடந்துஜெயிப்பதே உழைப்பு
காவியமாயது எழுந்து நிற்பதே மதிப்பு...
உன்னை ஜெயித்து உலகைவென்றிடு
உச்சகட்டமுயற்சியில் உயிரையும் மறந்திடு
மண்ணை பொன்னாய் விளையச்செய்திடு
மனதை உழுது மனிதனாய் முளைத்திடு...
சோர்வை நெஞ்சில் சேர்த்துவைக்காதே
சோகமதனை மலையாயெண்ணாதே
தீர்வுகளிங்குதான் தூரத்தில் தேடாதே
தீமைகளே ஏணிகள் பயந்துஓடாதே...

No comments: