Monday, November 3, 2014

கனவுக்குள் முளைத்த கவிதை...




கோபங்கள் திரண்டாலும்
வேகங்கள் சூழ்ந்தாலும்
தூரங்கள் நீண்டாலும்
நேசங்கள் குறைந்துபோகவில்லை

எத்தனை பிளவுகள்
எத்தனை பிரிவுகள்
அத்தனையும் சுற்றிக்கொண்டபின்னும்
அடுத்தநொடி சேர்ந்துகொள்ளும்
நமதுறவுக்கு காரணமென்னவோ



துண்டுதுண்டாக சிதறியபின்னும்
துளியிடைவெளிகாட்டாக்
கண்ணாடிச்சிற்பமாய் ஜொலிக்கும் இக்
காதல்தான் அதிசயமென்கின்றேன்

அன்புக்கு அர்த்தங்கள்கோடி
அனைவரும் சூட்டலாம் என்
அறிவுக்கெட்டியவரை இந்நேசம்
நமக்கான வரமென்பேன்

புரிந்துகொள்ளுதல் மட்டும் உயிர்
முடிந்துபோகுமட்டும்
முறிந்திடாமல் இருந்தால் நாம்
எத்தனை தடவையும் கோபிக்கலாம்
நமக்கு பிரிவென்பது உறவிலில்லை
உணர்வுகளிலில்லை ஏன்
நம் விதியில்கூட இல்லை
நம் பிடிவாதங்களில் மட்டுந்தான்

இன்னும் வார்த்தைக்கோடி சேர்த்து
நம் வாழ்க்கைப் பாட ஆசை
இதழில் புன்னகைச்சூட்டி பல‌
கானங்கள் சேர்க்க ஆசை
நீமட்டும் எனதருகில் இருந்தால்!!!