Tuesday, October 27, 2015

புதிதாய் வானில் பறக்கிறேன்




இப்போதெல்லாம் மனம்
இலேசாகிப் போ யிருக்கிறது
கறுத்த இரவுகளும்
காணாமல்போன இனிமைகளும்
அநாயசமாய் வந்தமர்ந்திருக்கிறது
ஓலமிட்ட துயரங்கள்
ஒன்றுக் குமுதவாத கண்ணீர்களும்
ஓடிப்போய் ஒளிந்துகொண்டன‌

அத்தனைப்பூக்களையும் ரசிக்கின்றேன்
அழும் குழந்தைகளையும் கொஞ்சுகின்றேன்
பித்துப்பிடித்த நிஜங்களைய‌ழித்து
புதிதாய் வானில் பறக்கிறேன்

நிமிடங்கள் அழகானது
நிதர்சனங்களை யது காட்டியது

நீலவானம் நிறம்மாறினாலும்
நின்று ரசிக்கத்தோன்றுகின்றது

வாழ்க்கை விசித்திரமானது
தாழ்வை தூக்கி மிதித்துப் போட்டால்
கடந்திடும் பாதை சுவையானது
கண்டால் அதுவே சுவாரஸ்யமானது

இதையும் கடந்து போ.



வழிகள் முழுவதும்
வலிகள் கொட்டிக்கிடக்கலாம்
ஒளியே இல்லாப்பாதையில் நீ
விழி திறந்துகொண்டே பயணிக்கலாம்

    அதையும் கடந்துபோ.....


நம்பிப்பிடித்த கைகள்
நரம்பறுத்துச் செல்லலாம்
வெம்பிநின் றழுதாலும் திரும்பாத‌
வெறுமுறவுகள் நீங்கிச்செல்லலாம்

   இதையும் கடந்துபோ......

புன்னகைசாலையில் போன பயணம்
புண்களை தூவிவிட்டு
எண்ணிக்கையில்லா இரும்புக்கம்பிக்குள்
மண்டியிடச்செய்திருக்கலாம்

    அதையும் கடந்து போ...

எதிர்பார்ப்புக்கள் எல்லைவரைசென்று
புதிர்களை மட்டும் ஏந்திக்கொண்டு நீ
பிதிர்க்கடனாளியாய் வேதனையோடு
அதிர்ந்துபோய் திரும்பி வந்திருக்கலாம்

    இதையும் கடந்துபோ...

லட்சியக்குதிரையிலேறி வேகமான நீ
லட்சக் குறைவினால் நொண்டியாகி
எட்டி நடக்கும் பலமிழந்து படுக்கையில்
முட்டிமோதியெழும் கண்ணீரினை துடைத்துக்கொண்டிருக்கலாம்
 
     அதையும் கடந்துபோ....


கடப்பதற்காகத்தான் கால்கள்
நடப்பதற்காகத்தா னுன் கண்கள்
திடமாய் பிடித்துக்கொள்ளத்தானே காலங்கள்
மடமடவென்று மேல்நோக்கி பறந்து

      இதையும் கடந்துபோ

இருளேயென்று முடங்கிப்போய்விடாதே
இதயமேனோ மென்மையென்று புலம்பாதே
அருளான தைரியத்தை அணிந்துகொண்டு நீ
விரும்பிய பாதையில் நடந்து

      அத்தனையும் கடந்துபோ....

வஞ்சங்களையும் தோல்விகளையும்
நெஞ்சத்துள் சுமந்து திரியாதே
கொஞ்சமாய் விழித்துகொண்டாலும்
துஞ்சலாம் தன்னம்பிக் கையினின் பங்களை


   இதையும் கடந்துபோ....

எதுவும் கடந்து போய்விடும்
நிரந்தரமாய் எதற்கும் ஆயுளுமில்லை
இதுவா வாழ்வென்று வெம்பிடாதே
இதையும் கடந்து போய்க்கொண்டேயிரு.... 

Sunday, October 25, 2015

யன்னலோர இருக்கை







பேரூந்து பயணத்தில்
மகிழ்ந்து போவதுஎன்னவோ
யன்னலோர இருக்கையில்தான்..


நாசியை துளைக்கும்
வியர்வை மணத்தையும்
நாகரிகமில்லா நரகர்களின்
வினைகளில் விடுபடவும்
விரும்பிடுவது ஏனோ
யன்னலோர இருக்கையில்தான்....

முன்னெழுந்து பிந்தூங்கும்
முறைமையில் உழல்வதால்
சின்ன உறக்கத்தில் தேக‌
இறுக்கத்தை குறைத்திட‌
ஏங்குவதோ இந்த
யன்னலோர இருக்கைக்காகத்தான்....

என் தொலைபேசியில்
குவிந்து போ யிருக்கும்
குறுஞ்செய்திகளுக்கும்
பதிலளிக்க முடியாது போன‌
அம்மாவின் அழைப்புக்கும்
ஆறுதலாய் பேசிட‌
ஆர்வமாய் தேடுவது
யன்னலோர இருக்கையைத்தான்...

முகநூலில் மலர்ந்துபோயிருக்கும்
நண்பர்வட்டத்து அரட்டைக்கும்
வகைவகையான அவர் படைப்புக்களை
வாசித்து பின்னூட்டமிடவும்
வாஞ்சித்து நிற்பது
யன்னலோர இருக்கைக்காகத்தான்...

காற்றோடு சுமந்துவரும்
கவிக்கருவை சுகமாய் அள்ளிக்கொள்ள‌
நேற்றோடு மறந்துபோன பல‌
நேச நினைவுகளை மீட்டுச்சுவைத்திட‌
தேர்ந்தெடுப்ப தென்னவோ
யன்னலோர இருக்கையைத்தான்..


என்னதான் இரக்கக்குணம்
இதயத்தோடு ஒட்டிக்கொண்டாலும்
பட்டென எழுந்து
இருக்கையை பகிர்ந்தளித்தாலும்
நின்றுகொண்டு ஏக்கமாய்
நெஞ்சுக்குள் ஏங்குவது இந்த‌
யன்னலோர இருக்கைக் காக‌
மட்டு மாகத்தானிருக்கும்
பேருந்து பயணத்தில்.....!!

Friday, October 16, 2015

யோசிக்கமுடியா வுலகில் வாழ்ந்தோம்

பேசிப்பேசி நேசம் வளர்த்தோம்
நாசிவரையில் பாசம் நிறைத்தோம்
வாசித்தறியா கவியில் திளைத்தோம்
யோசிக்கமுடியா வுலகில் வாழ்ந்தோம்

பாசிப்போல படிந்துகொண்டோம்
தூசிவிழுந்தாலும் துடித்துப்போவோம்
ஏசிப்பேசிய கோபங்களறியோம் -நமக்குள்
ஆசியளிக்கும் இறைகளானோம்....

ஊசிக்குள் நுழைந்திடும் விந்தைக்கற்றோம்
வீசியெறிந்திடா உறவை காத்தோம்
ஓசிவாங்காமல் கவிதை படைத்தோம்
ராசியானவர்களாய் நாமுமானோம்...

கூசிடும் வார்த்தைகள் அழித்துவிட்டோம்
நேசித்திடும் வித்தைகளை அறிமுகம்செய்தோம்
பேசிப்பேசி நேசம் வளர்த்தோம்
யோசிக்கமுடியா வுலகில் வாழ்கின்றோம்...

Friday, October 2, 2015

மித்திரன் வார இதழுக்காக லண்டன் வானொலி அறிவிப்பாள் ஷைபா பேகம் அவர்களின் நேர்காணல்


கல்குடா நேசன் இணையத்தளத்தில் வெளியான எனது நேர்காணல் (25.09.2015)

இவ்வார “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணலில்” தலவாக்கலை கவிதாயினி த. எலிசபெத் inShare Screenshot_2015-09-21-14-07-41-1-minகல்குடா நேசனுக்காக ஓட்டமாவடி றியாஸ் அண்மைக்காலமாக பத்திரிகை, வானொலி, இணையத்தளங்கள் என்று எழுதி வரும் பிரபலமான பெண் எழுத்தாளர் ஒருவரை இவ்வார இலக்கிய நேர்காணலூடாக சந்திப்பதில் கல்குடா நேசன் மகிழ்ச்சியடைகிறது. அந்த வகையில், ‘கல்குடா நேசனின் இவ்வார இலக்கிய நேர்காணலில்” இணைந்து கொள்கிறார் மலையகத்தின் தலவாக்கலையில் பிறந்த கவிதாயினி த. எலிசபெத் 10356264_684363331635840_8923784676178505349_n-minஉங்களைப் பற்றி அறிமுகமொன்றை எங்கள் ‘கல்குடா நேசன்” இணையத்தள வாசகர்களுக்காக சொல்லுங்களேன்? 12047282_932514450154059_1512616066_n-min-minஇலங்கையின் இதயமாம் மலையகத்தின், இயற்கை எழிலே சூழலாகக்கொண்டு, வரலாற்று சிறப்பிடமாக கூறப்படும் தலவாக்கலை எனுமிடத்தில் பிறந்து அங்கேயே எனது பாடசாலை காலம் வரை கழித்திருந்தேன். தொழில் நிமித்தமாக தலைநகரில் தற்போது வசித்து வருகின்றேன். மூன்று சகோதரர்களுக்கு மூத்தவளான நான் சிவபதி தங்கராஜ் தம்பதிகளின் புதல்வி. ஆசிரியையாக பணியாற்றி வருகின்றேன்.

Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu
இவ்வார “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணலில்” தலவாக்கலை கவிதாயினி த. எலிசபெத் inShare Screenshot_2015-09-21-14-07-41-1-minகல்குடா நேசனுக்காக ஓட்டமாவடி றியாஸ் அண்மைக்காலமாக பத்திரிகை, வானொலி, இணையத்தளங்கள் என்று எழுதி வரும் பிரபலமான பெண் எழுத்தாளர் ஒருவரை இவ்வார இலக்கிய நேர்காணலூடாக சந்திப்பதில் கல்குடா நேசன் மகிழ்ச்சியடைகிறது. அந்த வகையில், ‘கல்குடா நேசனின் இவ்வார இலக்கிய நேர்காணலில்” இணைந்து கொள்கிறார் மலையகத்தின் தலவாக்கலையில் பிறந்த கவிதாயினி த. எலிசபெத் 10356264_684363331635840_8923784676178505349_n-minஉங்களைப் பற்றி அறிமுகமொன்றை எங்கள் ‘கல்குடா நேசன்” இணையத்தள வாசகர்களுக்காக சொல்லுங்களேன்? 12047282_932514450154059_1512616066_n-min-minஇலங்கையின் இதயமாம் மலையகத்தின், இயற்கை எழிலே சூழலாகக்கொண்டு, வரலாற்று சிறப்பிடமாக கூறப்படும் தலவாக்கலை எனுமிடத்தில் பிறந்து அங்கேயே எனது பாடசாலை காலம் வரை கழித்திருந்தேன். தொழில் நிமித்தமாக தலைநகரில் தற்போது வசித்து வருகின்றேன். மூன்று சகோதரர்களுக்கு மூத்தவளான நான் சிவபதி தங்கராஜ் தம்பதிகளின் புதல்வி. ஆசிரியையாக பணியாற்றி வருகின்றேன். Screenshot_2015-09-21-14-06-04-1-min 10356264_684363331635840_8923784676178505349_n-minஉங்களை கவிதை எழுதத்தூண்டியது வாசிப்பு அனுபவமா? இல்லை இயல்பாகவே எழுந்த உள்ளார்ந்த தூண்டுதலா? 12047282_932514450154059_1512616066_n-min-minவாசிப்பனுபவமே என்று தான் கூற வேண்டும். மிகச்சிறிய வயதிலேயே எனது அப்பாவின் அப்பா என்னை வாசிப்பதற்கும் வானொலியில் சிறுவர் நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கும் பழக்கியிருந்தார். அந்தப்பழக்கம் தொடர்ந்து என்னை வாசிக்க ஊக்குவித்தது. பாடசாலைக்காலங்களில் நிறைய வாசிக்கும் வசதி கிடைத்தது. பயன்படுத்திக்கொண்டேன். பத்திரிகை, கதைப்புத்தகங்கள், நாவல்கள் என்று ஒரு பக்கம் விடாமல் படித்து முடித்து விடுவேன். இப்போது நினைத்தாலும் அந்த அனுபவங்கள் மனதுக்கு மிக்க மகிழ்ச்சியைத்தருகின்றது. 10356264_684363331635840_8923784676178505349_n-minஉங்கள் எழுத்துப்பணிக்கு உங்கள் குடும்பம் ஆதரவளிக்கிறதா? 12047282_932514450154059_1512616066_n-min-minஎந்த விதத்திலும் எதிர்ப்பு இதுவரை வந்ததில்லை. பத்திரிகை, வானொலிகளில் எனது படைப்புக்கள் வந்ததும் முதலில் பார்த்து மகிழ்வது அவர்களே. 10356264_684363331635840_8923784676178505349_n-minமலையக தோட்ட தொழிளாலர்களின் வாழ்வு மிகவும் கஷ்டங்களும் வலிகளும் நிறைந்ததுமாகும். எந்த உரிமைகளற்றதும் அடக்கப்படுவதும் சுரண்டப்படுவதும் அதிகம் கொண்டதும் என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் உங்கள் படைப்புகள் அவ்வாறான அடிமட்ட மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளைப் பேசுகிறதா? 12047282_932514450154059_1512616066_n-min-minநிச்சயமாக. எனது பல கவிதைகள், சில சிறுகதைகள் மலையக‌ப்பிரச்சினைகள் சார்ந்ததாக எழுதியிருக்கின்றேன். எதிர்காலத்தில் இன்னும் அது பற்றி நிறைய விடயங்களை பேச வேண்டுமென்ற ஆசை காணப்படுகின்றது. கட்டாயம் அது பற்றி விஷேடமாக எழுதுவேன். FB_IMG_1442904207956-min 10356264_684363331635840_8923784676178505349_n-minமலையகத்திலிருந்து பெண்ணியல் சார்ந்த கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் சிலவும் வந்திருந்த போதிலும் ஒரு முழுமையான இலக்கியப் படைப்போ ஆய்வு நூலோ வெளி வராமை பெரும் குறையாகவே காணப்படுகிறது. இது பற்றி உங்கள் கருத்து? 12047282_932514450154059_1512616066_n-min-minவருந்தக்கூடிய உண்மை தான். மலையகத்திலிருந்து பெண் படைப்பாளிகளின் எண்ணிக்கையும் குறைவே, பெண்ணியல் சார்ந்த விடயங்களைப் பேசுவதற்கும், அது குறித்த எழுத்தாக்களையும் செயன்முறைகளையும் பலர் முன்னெடுத்து வந்திருந்த போதும், முழுமையாக நூல் வடிவில் வராத போதும் அது பற்றி அதிகமாகவே பேசப்படுகின்றது. ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் போய் சேர்கின்றது. அந்த வகையில் மகிழ்ச்சியே. எதிர்காலத்தில் அவ்வாறானதொரு நூல்களை எதிர்பார்க்கலாம். 10356264_684363331635840_8923784676178505349_n-minயாழ் இலக்கிய குவியம் வெளியிட்ட ‘நாம்” என்ற கவிதைத்தொகுதியில் உங்கள் கவிதையும் இடம் பெற்றிருக்கிறதே? 12047282_932514450154059_1512616066_n-min-minமகிழ்ச்சியான விடயமொன்று, முகநூலில் வெளிவருகின்ற சிறந்த கவிதைகளைத் தொகுத்து யாழ் இலக்கிய குவியம் கையடக்கமான சிறிய கவிதை நூலினை வெளியிட்டதது. பல இளம் படைப்பாளிகளின் கவிதைகளை சுமந்து வந்தது. எனது கவிதையும் அந்நூலில் இடம்பெற்றதை பெறுமையாக எண்ணுகின்றேன். யாழ் இலக்கிய குவியத்தின் அமைப்பாளர் திரு. தாஸ் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றியினை இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன். அந்த அவரின் முயற்சியானது படைப்பாளிகளுக்கு ஊக்கமாகவும் தங்களை வளப்படுத்திக்கொள்ள களமாகவும் அமைந்திருந்தது. FB_IMG_1443000569082-min 10356264_684363331635840_8923784676178505349_n-minஇலங்கை தேசிய கவி சம்மேளனம் 2012 நடாத்திய கலை இலக்கிய பெரு விழாவில் உங்களுடைய இலக்கியப் பணியைப் பாராட்டி காவியப்பட்டம் வழங்கி கெளரவித்தார்கள். இது பற்றி…? 12047282_932514450154059_1512616066_n-min-minநான் எதிர்ப்பார்க்காத ஓர் அதிர்ச்சியான பொழுதுகள் அவை. இந்நிகழ்வுக்கு அழைப்புக்கடிதம் வந்ததும் வியந்து போனேன், நூலொன்றினை வெளியிடாமல் முழுமையான ஒரு படைப்பாளியாக ஏற்றுக்கொள்ளாத இலக்கிய சமூகம் பட்டம் வழங்கிக் கெளரவித்திருப்பது என்னளவில் பெறுமையே. ஊடகங்களில் வெளிவந்த படைப்புக்கள் பட்டம் வரை கொண்டு சென்றது. எனது இலக்கிய முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியென்று நினைக்கிறேன். அத்தனைப் பெரிய இலக்கியவாதிகள் மத்தியில் சிறியளவில் முயற்சித்துக்கொண்டிருக்கும் என்னையும் தெரிவு செய்து ஊக்குவித்த அமைப்பினருக்கு இவ்வேளையில், மனப்பூர்வமான நன்றிகளினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். 10356264_684363331635840_8923784676178505349_n-minமலையக மண்ணிலிருந்து தலைநகர் கொழும்பில் பணி நிமிர்த்தமாக ஒரு தற்காலிகமான வாழ்வினை அமைத்திருக்கின்றீர்கள். இந்த சூழல் எப்படியிருக்கிறது? 12047282_932514450154059_1512616066_n-min-minஇந்தச்சூழல் ஆரம்ப காலங்களில் மிக மிகக்கடினமாக இருந்தது. எல்லாமே குடும்பத்தின் ஆதரவில் கிடைத்தது. பிறகு சுயமாகச் செய்ய வேண்டியேற்பட்டதால் மிகவும் சிரமப்பட்டேன். எனது அண்ணாமார்களும் பெரியம்மாவும் இந்த சிரமத்திலெல்லாம் உதவி செய்தார்கள். இப்போது பழக்கப்பட்டு விட்டேன். நிறைய மனிதர்களைப்பற்றி படித்துக்கொண்டும் விட்டேன் 10356264_684363331635840_8923784676178505349_n-minநல்ல கவிதைகளை எப்படி வரையறுக்கிறீர்கள்? 12047282_932514450154059_1512616066_n-min-minநல்ல கவிதை என்பது வாசகனுக்குப் புரிந்திருந்தால், அவன் அதில் மகிழ்ந்திருந்தால் ஓர் செய்தியினைப் பெற்றுக்கொண்டால், அதனை நல்ல கவிதை எனக்கூறலாம். மற்றும் படி வரையறுக்க வேண்டிய பெரிய தகுதியெல்லாம் தேவையில்லை என நினைக்கின்றேன். கவிதை கட்டுரையாகாமல் இருப்பதே அதன் முதல் தகுதி. இன்று அதிகமானவர்கள் புதுக்கவிதையென கட்டுரைகளையே எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். வாசகனே கவிதையின் தரத்தைத் தீர்மானிப்பவன். FB_IMG_1442178873449-min 10356264_684363331635840_8923784676178505349_n-minதொடர்ந்து செல்லும் உங்கள் இலக்கியப் பயணத்தில் உங்கள் முன்னோடி வழிகாட்டி என்று யாரையாவது குறிப்பிடுவீர்களா? 12047282_932514450154059_1512616066_n-min-minஎன்னுடைய இலக்கியப் பயணத்தில் நிறைய பேரை சொல்ல வேண்டும். முதலில் எனக்கு எழுத்தார்வத்தை ஊட்டிய என் அப்பப்பாவை சொல்ல வேண்டும். அவர் தான் இதன் ஆரம்பம். அதன் பிறகு நல்ல புத்தகங்கள், இலக்கிய நண்பர்கள், மூத்த இலக்கியவாதிகளின் ஆலோசனைகள் இவைகளே என்னை ஊக்கப்படுத்தியது. 10356264_684363331635840_8923784676178505349_n-minதா.எலிசபெத் என்ற பெயரிலும் எழுதுகிறீர்கள். அதே போல் முகநூல் இணைய தளங்கள் வாயிலாக ராஜ் சுகா என்ற பெயரிலும் எழுதுகிறீர்கள். இது தவிர்த்து வேறு புனைப்பெயர்கள் எதுவுமுண்டா? 12047282_932514450154059_1512616066_n-min-minஇல்லை. இந்த இரண்டு பெயர்களில் மட்டும் தான் எழுதி வருகின்றேன். 10356264_684363331635840_8923784676178505349_n-minநீங்கள் ஒரு ஆசிரியை என்ற வகையில் இன்று மாணவர்கள் மத்தியில் வாசிப்புப்பழக்கம் எப்படியிருக்கிறது? 12047282_932514450154059_1512616066_n-min-minதற்கால மாணவர்கள் மத்தியில் வாசிப்புப்பழக்கம் மிகக்குறைவு என்றே நினைக்கின்றேன். மாணவர்கள் நூலகங்களைத்தேடிச்செல்வதை விட இன்டநெட், கபேக்களை நாடிச்செல்வதே அதிகமாகக் காணப்படுகின்றது. மிகக்குறுகிய வட்டத்துக்குள்ளே தங்களது வாசிப்பனுபத்தை கொண்டுள்ளார்கள். பத்திரிகைகள், நூல்கள், வரலாற்று, இலக்கிய நூல்களைத் தெரிவு செய்து வாசிப்பது மாணவர்கள் மத்தியில் அரிதாகிக்கொண்டே வருகின்றது. கணனி விளையாட்டுக்களிலும், முகநூல் கணக்குகளிலும் (உயர் வகுப்பு மாணவர்கள்) தங்களது நேரத்தைச் செலவிடுகின்றனர். 12026447_935374449868059_1416475932_n (1)-min 10356264_684363331635840_8923784676178505349_n-minஅருகி வரும் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த எவ்வாறன வழிகளை ஆசிரியர்களும் பெற்றோர்களும் கையாள வேண்டும் ? 12047282_932514450154059_1512616066_n-min-minமுன்பெல்லாம் வீடுகளில் நாளிதழ் வாங்காவிட்டாலும் வாரப்பத்திரிகையாவது வாங்கி விடுவார்கள். அப்போதெல்லாம் எமக்கு ஏதாவதொன்றை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இன்றைய கணனி யுகத்தில் இணையத்தில் அந்த வசதியிருந்த போதும் அவை சரியாகப் பயன்படுத்தப்படுகின்றதா? என்பது கேள்விக்குறியே. ஆதலால் பாடசாலை நூலகங்களைச் சரியாக பயன்படுத்த மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க‌ வேண்டும். புதிய நூல்கள் கிடைப்பதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்த வேண்டும். வீடுகளில் பெற்றார்கள் சிறுவயது முதலே வாசிப்புப்பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இது பெற்றோரின் தலையாய கடமையென்றே கூறுவேன். பிள்ளைகளின் பிறந்தநாள் விழாக்களுக்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்யும் பெற்றார், நண்பர்கள், அவர்களுக்கு குறைந்தது ஒரு நூலையாவது பரிசளிப்பது ஒரு நல்ல பழக்கமாகும். பத்திரிகை வாசித்தலை பழக்கப்படுத்துங்கள், சிறந்த நூல்களைத் தெரிவு செய்து கொடுத்து வாசிப்புப்பழக்கத்தை மேம்படுத்துங்கள், இதுவே நாம் நம் சந்ததியினரின் எதிர்கால வளர்ச்சிக்குச் செய்யும் ஓர் நல்ல விடயமாகும். Screenshot_2015-09-21-14-07-41-1-min 10356264_684363331635840_8923784676178505349_n-minஉங்கள் முதலாவது கவிதை தொகுப்பு வெகு விரைவில் வரவிருப்பதாக அறிந்தோம். இது பற்றிச் சொல்லுங்களேன்? 12047282_932514450154059_1512616066_n-min-minஆமாம். ‘சுமைகளின் சத்தங்கள்’ என்ற தலைப்பில் ஓர் கவிதை நூலினை வெளியிடுவதற்காக முயற்சித்துக்கொண்டிருக்கின்றேன். கடவுள் சித்தமானால் இவ்வருடத்துக்குள் வெளியிடலாமென்று நினைத்திருக்கின்றேன். 10356264_684363331635840_8923784676178505349_n-minஇறுதியாக….? 12047282_932514450154059_1512616066_n-min-minஇலங்கையில் எங்கோ ஓர் மூலையிலிருந்த என்னையும் எனது கவிதைகளையும் இவ்வளவு தூரம் கொண்டு வந்த கல்குடா நேசன் இணையத்தளத்திற்கும் என்னை நேர்கண்ட எழுத்தாளர் றியாஸ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். Share ! inShare

Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu
http://kalkudahnation.com/

கல்குடா நேசனுக்காக ஓட்டமாவடி றியாஸ் அண்மைக்காலமாக பத்திரிகை, வானொலி, இணையத்தளங்கள் என்று எழுதி வரும் பிரபலமான பெண் எழுத்தாளர் ஒருவரை இவ்வார இலக்கிய நேர்காணலூடாக சந்திப்பதில் கல்குடா நேசன் மகிழ்ச்சியடைகிறது. அந்த வகையில், ‘கல்குடா நேசனின் இவ்வார இலக்கிய நேர்காணலில்” இணைந்து கொள்கிறார் மலையகத்தின் தலவாக்கலையில் பிறந்த கவிதாயினி த. எலிசபெத்

Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu

வாழ்க்கை விசித்திரமானது

இப்போதெல்லாம் மனம்
இலேசாகிப் போ யிருக்கிறது
கறுத்த இரவுகளும்
காணாமல்போன இனிமைகளும்
அநாயசமாய் வந்தமர்ந்திருக்கிறது

ஓலமிட்ட துயரங்கள்
ஒன்றுக் குமுதவாத கண்ணீர்களும்
ஓடிப்போய் ஒளிந்துகொண்டன‌....

அத்தனைப்பூக்களையும் ரசிக்கின்றேன்
அழும் குழந்தைகளையும் கொஞ்சுகின்றேன்

பித்துப்பிடித்த நிஜங்களைய‌ழித்து
புதிதாய் வானில் பறக்கிறேன்
நிமிடங்கள் அழகானது
நிதர்சனங்களை யது காட்டியது
நீலவானம் நிறம்மாறினாலும்
நின்று ரசிக்கத்தோன்றுகின்றது

வாழ்க்கை விசித்திரமானது
தாழ்வை தூக்கி மிதித்துப் போட்டால்
கடந்திடும் பாதை சுவையானது
கண்டால் அதுவே சுவாரஸ்யமானது

துடிப்பே இல்லாத பயணம்...


அதிகாலையை எழுப்பிடும் அலாரம் விழிகளுக்கோ
அலாதிக்குள் மூழ்கிடும் உறக்கம்
அலுவலக நினைப்போ நெஞ்சுக்குள்
அலறியடிக்கத் தூண்டிடும் நெருக்கம்

சிட்டாய் தேனியாய் எனக்குள்
சில்லென்ற உற்சாகம் தொற்ற‌
பட்டாய் பட்டமாய் நானும்
பறப்பதற்காய் பாதையிலே

தேங்கி நின்றிடும் தேக்கங்களாய்
வேகமெடுக்கா வாகன சில்லுகள்
ஓங்கி அடித்தான் ஒருவன் சேற்றை
ஓரத்தில் நிற்குமென்மேல்

மனிதம் தேடும் உலகினில் அந்தோ
மடிந்து போனது உள்ளம்
துணிந்து தவறை இழைத்தும்
துடிப்பே இல்லாத பயணம்...

அமைதியாய் விடிந்த அழகான காலை
ஆர்ப்பரிக்கும் கடலலையானதே இதயம்
சுமையாய் படர்ந்து அழுக்கான அவனை
சுட்டெரிக்கத்தோன்றியதே...

எக்கேடு கெட்டாலும் தன்னலம் காக்க‌
எதனையும் செய்திடும் மக்காள்
பக்கத்தில் நின்றிடும் மனிதம் காக்கா தூநீ
பறந்து எங்கேபோய் முடிவாய்....


(மழைக்காலமான இந்நாட்களில் வாகன சாரதிகளின் மெத்தப்போக்கு இன்று காலையில் என்னை கடுப்பாக்கியது. ஏதோ பெரிய அப்பாடக்கர்களைப்போல வேகமாக‌ போகும் அவர்களின் திமிர்தனங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அந்த ஆதங்கம். சம்பவம் இதுதான்: வயதான ஒருவர் குடையுமில்லாமல் வேகமாக வேலைக்கு போகும்போது அதிவேகமாய் வந்த அந்தக்கார் சேற்றை அள்ளியடித்து விட்டுபோனதும் அப்பாவியாய் பார்த்து தனது உடையின் சேறுகளை தட்டிக்கொள்கிறார் அந்தப்பெரியவர்.... )

தோஹா கட்டார் நாட்டில் வெளிவரும் "தமிழ் டைம்ஸ்" பத்திரிகையில் வெளியான எனது கட்டுரை