Friday, October 2, 2015

வாழ்க்கை விசித்திரமானது

இப்போதெல்லாம் மனம்
இலேசாகிப் போ யிருக்கிறது
கறுத்த இரவுகளும்
காணாமல்போன இனிமைகளும்
அநாயசமாய் வந்தமர்ந்திருக்கிறது

ஓலமிட்ட துயரங்கள்
ஒன்றுக் குமுதவாத கண்ணீர்களும்
ஓடிப்போய் ஒளிந்துகொண்டன‌....

அத்தனைப்பூக்களையும் ரசிக்கின்றேன்
அழும் குழந்தைகளையும் கொஞ்சுகின்றேன்

பித்துப்பிடித்த நிஜங்களைய‌ழித்து
புதிதாய் வானில் பறக்கிறேன்
நிமிடங்கள் அழகானது
நிதர்சனங்களை யது காட்டியது
நீலவானம் நிறம்மாறினாலும்
நின்று ரசிக்கத்தோன்றுகின்றது

வாழ்க்கை விசித்திரமானது
தாழ்வை தூக்கி மிதித்துப் போட்டால்
கடந்திடும் பாதை சுவையானது
கண்டால் அதுவே சுவாரஸ்யமானது

No comments: