குழந்தை இயேசு குடிசையிலே
குளிராம் வருடக் கடைசியிலே
மழலை முகிழப் புவியினிலே
தவழ்ந்தார் இந்தத் தினத்தினிலே...


பாலகன் அவரே பிறந்தாரே
பாவங்கள் போக்கிடும் மருந்தாக‌
தாளங்கள் கீதங்கள் முழங்கிடவே
தரணியில்  இன்பம் பூப்பதாக...


கன்னிகை மரியாள் வயிற்றினிலே
கருவாய் அமர்ந்தார் ஆவியிலே
தன்னலம் மறந்திடும் பலியாக‌
தன்னையே துறக்க உயிர்த்தாரே...


ஆகாயம் எங்கிலும் ஆனந்தமாக‌
ஆர்ப்பரிக்கும் நட்சத்திரம் பூக்களாக‌
தாளாத இன்பத்தில் குழந்தையாக‌
நாமெல்லாம் மகிழ்வோம் ஒற்றுமையாக...


அல்லேலூயா ஓசைகள் எழுப்பிடவே
அவரின் நாமம் உயர்ந்திடவே
எல்லோரும் அன்பில் இணைந்திடவே
எழும்பட்டும் வெற்றிநாளாய் இத்தினமே...


தூயவர் புகழை பாடிடவே
தூதர்கள் எங்கும் ஆரவாரத்தில்
வானவர் பிறப்பில் திளைத்திடவே
வாருங்கள் பரிசுத்த திருநாளில்...


நத்தார் கீதங்கள் தொனிக்கட்டும்
நன்மைகள் எங்கும் தொடரட்டும்
இத்தனைநாள் துன்பங்கள் ஓய்ந்திடட்டும்
இனிவரும் காலமெல்லாம் ஒளிர்ந்திடட்டும்...