Wednesday, December 26, 2012


கலகம் செய்திடு‌ !!


தோழா தோழா துணிந்து எழுந்திடு
சீறும் பாம்பாய் சிலிர்த்து நின்றிடு
வாளால் தலையை கொய்தல் தடுத்திடு
வாய்மையதனை விளங்கச்செய்திடு...

பாசம் போக்கும் பணத்தை மிதித்திடு
பாரில் நல்ல விளைச்சல் செய்திடு
காசாய் பார்க்கும் கன்னியர் வாழ்வை
காதலால் உருவாக்க கலகம் செய்திடு...

நீயா நானா போட்டி வளர்த்திடு
தீங்காய் முடியும் பொறாமை கொன்றிடு
தீயால் மலர்ந்த தீபம் போலவே
தீமையில் நன்மையை திமிராய் வென்றிடு...

போகப் போகப் புலமை கண்டிடு
போற்றும் அறிவை பரிசாய் பெற்றிடு
தேகம் தின்றிடும் வறுமை ஒழிக்க‌
வேகத்தை நீயும் வியர்வையாய் ஒற்றிடு...

ஒழியு மொழியும் தனி மையொழியும்
ஒளியும் அருகே தெளிவா யெரியும்
விழியும் வ‌ழியை விரை வாயறிய‌
அழிவும் மறைந்து பொழிவாய் மிளிரும் !!!

No comments: