Tuesday, December 25, 2012


முறிய‌டிக்க‌ப்ப‌டாத‌ முடிச்சுக்க‌ள்

அலைகடல் நடுவே
அநாதரவாய் விடப்பட்ட
அகதிகளைப்போல என்
இதயவறைக்குள்
நீயில்லாத உன் நினைவுகள்...

தேயிலை செடிந‌டுவே
தேகமுறிஞ்சும் அட்டைகளாய் நம்
கடந்தகால கல்வெட்டுக்கள்
நிம்மதி சுவாசம் தர மறுக்கிறது...

பாவம் செய்தவன் மட்டும்
தண்டனை பெறுவதில்லை
அகதிமுகாமும் என்
காதலும் சொல்லுகிறது...

மனசாட்சி
உறுத்தல்க‌ள் ம‌னித‌த்துள்
ம‌ர‌ணித்துவிட்ட‌தோ
ச‌க்தியில்லாத‌ ச‌ட்டங்க‌ளால் என‌க்குள்
ச‌ந்தேக‌க்கோடுக‌ள் நீயெனை
தூக்கியெறிந்த‌ பிற‌கு...

நில‌வு வான‌ம் தாண்டிய‌
முன்னேற்ற‌ங்க‌ள் இவ்வுல‌கில்
காத‌லும் தொழிலாள‌ர் பிர‌ச்ச‌னையும் ம‌ட்டும்
கால‌த்தால் அழியாத‌ காவிய‌ங்க‌ள்...

கானல் நீரில்
முக்குளிக்க‌ச்சென்ற‌ காதலால் என்
க‌விதைக‌ளில் ஆழ‌மான‌ இட‌முன‌க்கு...

No comments: