Wednesday, December 26, 2012


கவிதைப்புரட்சி !

மரபுச்சாதம் வடித்து
புதுக்கவி குழம்புவைத்து
வரப்போகும் கணவனுக்கு
வாய்க்குருசியாய் பங்கிடுவேனென‌
வதந்தி பரப்பிடுகிறாளென் தோழி....

புகுந்த வீட்டிலுன்
புதுக்கவியெலாம் செல்லாது
வகை வகையாய் சமைக்கும்
வசியமறிந்தி டென்கிறாளென் அக்கா...

சிந்தனைப் புரட்சியாலுன் சமூக
சீர்திருத்தமெலாம் போதும்
சந்தோஷமான குடும்பமுருவாக்க அம்மாவிடம்
கற்றுக்கொள்ளென கண்டித்தாரப்பா...

பேனையோடு எனைக்கண்டால்
காகிதங்களை பதுக்கிடும் தங்கை
பூனைபோல பதுங்கியிருந்து
புன்னகை செய்கிறாளன்பில்....

சமவுரிமை பேசுமெனக்கிங்கு
சண்டைபோடமுடியவில்லை
அமைதிகாக்க நெஞ்சமெனை
ஆணையிட்டே அடக்குகின்றது...

No comments: