Wednesday, December 26, 2012


    • ஊரும்... உலகமும்....


      கைகளால் பூச்செண்டுதரு வாரவரே
      காலுக்கடியில்நமை வீசிவிட்டு செல்வார்
      தூக்கிவைத்து கொண்டாடுவார்
      தூரப்போனதும் பந்தாடுவார்...

      அன்பொழு கப்பேசுவார் அடிமனதில்
      அழிக்கவே திட்டம் தீட்டுவார்
      உதவி யென்றதும் யோசிப்பார்
      உதவ வில்லையென்றால் தூசிப்பார்...


      சொத்திருந்தால் கூடவே சேர்ந்திருப்பார்
      சோறில்லா திருந்தால் சேதிகேட்டிடார்
      ஊர்ப்பிள்ளைக்கு ஜோடி தேடிவைப்பார்
      தம்பிள்ளை புகழ் பாடியே வைப்பார்...


      ஊரிலுள்ள ஓட்டைகளையெல்லாம் தேடுவார் தம்
      ஓட்டைகளை உள்ளுக்குள் வைத்துமூடுவார்
      பணம் எவ்வளவும் பத்தாதென்பார்
      பணத்துக்காக எதையும் பத்தவைப்பார்...


      நண்பனென்றே சேர்ந்திருப்பார் 
      சந்தர்ப்பம் வந்தால் சேருமடிப்பார்
      முகஞ்சுழிக்க பேசமாட்டார் எம்மில்
      முன்னேற்றங் கண்டால் பொறுக்கமாட்டார்...


      புன்னகையில் பூக்கள் மலர்த்துவார்
      புற்றுப்பாம்பாய் விஷத்தையும் தெளிப்பார்
      நல்லவர்களென்றே தம்மை காட்டுவார்
      நாகமாயாக கொஞ்சமும் தயங்கார்...


      கைகளால் பூச்செண்டுதரு வாரவரே
      காலுக்கடியில்நமை வீசிவிட்டு செல்வார் !!



No comments: