Wednesday, December 26, 2012


ஊமையாயிருப்பது ஏனோ


அடைக்கலம் தவறிய
அடைக்கலாங்குருவி போல
அல்லலுறும் சில இதயங்கள்…..

வேற்றுமையின் உருவத்தில்
வேந்தர்கள் ….

ஆற்று நீரில் கலப்படம் கலந்த
அக்கிரமக்காரன் யார்....

சுவாசிக்கும் காற்றில்
சூனியம் வைத்த
சூத்திரதாரி யார் …..

எல்லையில்லா வானுக்கும்
எல்லைகளிட்டு தன் வசப்படுத்திய
எந்திர மனிதன் யார்…..

உடலுறுப்புக்கள் எல்லாருக்கும்
ஒன்றாயிருந்தும்
உண்ர்வுகளில் மட்டுமேனிந்த
ஒவ்வாமை…..

சாதிகள் இல்லையடி பாப்பா வென்ற
சாதனையாளனின் எண்ண்ம்
ஏட்டுச்சுரக்காயானது ஏனோ….

எண்ணங்களின் வளர்ச்சி
இமையத்தை தொட
மனிதத்தின்
பரந்த எண்ணங்கள் மட்டும்
இன்னுமின்னும்
ஊமையாயிருப்பது ஏனோ !!!

No comments: