Tuesday, December 25, 2012


நிய‌திக‌ளின் வ‌ழிய‌தினிலே....


ஆழ்வது மாள்வதும் மண்ணிலே நியதி
ஏழ்வதுந் தாழ்வதும் வாழ்வியல் பவனி வீழ்ச்
சியின் வடிவிலோர் விடியலின் மலர்ச்சி
சிந்தனையின் எழுச்சியில் சிகரம்போ லுயர்ச்சி...

குற்றஞ் சொல்லு லகைகுறையாய் நினைக்காதே
ஏற்றங் காண் பதிலுனக்குதவி மறக்காதே தற்
பெறுமையூ டதினால் தனித்துவ மிழக்காதே
பெற்ற பேற்றினையணைக்க  சோம்பலினை வளர்க்காதே...

பட்டப் பாடுதனை கற்களாய் கொண்டிடு
திட்டங்கள் தீட்டியதை கோபுரமாய் நட்டிடு எட்ட‌
நின்றிடும் சிக்கலை வீரமா யுடைத்திடு
நிசப்தமான தென்றலாய் மீண்டுமீண்டுஞ் சுழன்றிடு...

வேக‌மாய் போவ‌தெலாம் வெற்றியின் வ‌டிவ‌ல்ல‌
யோக‌மாய் வாய்ப்ப‌தெலாம் தோல்வியின் முடிவும‌ல்ல‌-வி
வேக‌மாய் ந‌ட‌ப்ப‌துவே வாழ்வ‌ழிய‌தின் வேட்கை
வேரூன்றி நிற்ப‌த‌ற்கு கிடைத்த‌ந‌ல் தீட்சை...

No comments: