Tuesday, December 25, 2012


உற‌வுக‌ளின் நிலையிதுவோ...

ஒவ்வொரு முறையுமே ஒன்றிடு ம‌வ்வேளையிலே
உற‌வென்று சொல்லியே உத‌றிவிட்டு செல்கையிலே
உள்ள‌ம‌து வெம்பியே உள்ளுக்குள் ளழுகையிலே
உயிர்க்கூடு த‌னிம‌ர‌மாய் உதிர்ந்தே போகிடுதே...

ந‌ட்பென்று நாசூக்காய் நாலுபேரு சொன்னாங்க‌
நானும‌தை நிஜ‌மாக உற‌வென்று ந‌ம்பினேங்க‌
நாலு நாளு பேசிட்டு நீங்கியே போனாங்க‌
ந‌ட்ட‌ந‌டு க‌ட‌லிலே ந‌ட்புக்காய் நானுமுங்க‌...
ஆளில்லா ஊரிலே ஆறுத‌லு ண்டாகிடுமோ
ந‌ண்ப‌ரில்லா வாழ்வினிலே நிம்ம‌திதா நிய‌ங்கிடுமோ
உண்மைக் கிங்கேன் ம‌திபேதும் வ‌ழ‌ங்க‌வில்லை
உறுதியாய் இருதிவ‌ரை உற‌வுக‌ளும் புல‌ங்க‌வில்லை...

வான‌ மேக‌முமே வ‌ங்க‌க் க‌ட‌ற்க‌ரையுமே‌
கொண்ட‌ முடிச்சினை தொட்டு தொட‌ருமே
வாங்கிவந்த‌ ப‌ந்த‌மும் வ‌லித‌ந்தே வில‌குதே
உற‌வுக‌ள் நிலையிதுவோ எண்ணிமன‌ம் புல‌ம்புதே...

No comments: