Tuesday, December 25, 2012




இலவசமாக்கிடுங்கள்

 கல்வியக அனுமதிக்கு
சிபாரிசு க‌டித‌ம் த‌ராதீர்
ச‌ம‌வுரிமை த‌ந்திடுங்க‌ள்...

ஏழை ப‌ண‌க்கார‌னென்ற‌ த‌குதி த‌விர்த்து
க‌ல்வித்த‌குதி த‌ந்திடுங்க‌ள்
இருதிவ‌ரை போராடுவோமென்ற‌
கோஷ‌ங்க‌ள் தவிர்த்து
கோரிக்கையாக்குங்க‌ள்...

நாளைய தலை‌வ‌ர்க‌ள் சிறுவர்களென்ற
சுயநல வார்த்தையை
சுதந்திரப்படுத்துங்கள்...

பெற்றுக்கொண்ட விளைநிலங்களில்
புற்களை வளர்க்காதீர்கள்
பணங்காய்க்கும் ம‌ரங்களாய்
பாட‌சாலைக்கு உர‌மிடாதீர்க‌ள்...

ச‌ம‌த்துவ‌த்தையும் சமாதான‌த்தையும்
அரிச்சுவ‌டியிலே ஆர‌ம்பித்திடுங்க‌ள்
ஏற்ற‌த்தாழ்வுக‌ளை வெட்டியெறிந்து
வெற்றிக‌ளை ம‌ட்டும் ஏந்திவ‌ர‌
ஏணிக‌ள் செய்திடுங்கள்...

வ‌றுமையெனும் சிவ‌ப்புக்கோடிட்டு
சின்ன‌ இத‌ய‌ங்க‌ளை
சின்னாபின்ன‌மாக்கி விடாதீர்க‌ள்
ஒற்றுமைக் காக‌ங்க‌ளாக‌
கூவி அழைத்திடுங்க‌ள் குழ‌ந்தைக‌ளை
அவ‌ர்க‌ள் வ‌ள‌ர‌ட்டும்
வ‌ழிகாட்டுங்க‌ள் ஒளி த‌ருவார்க‌ள்
இல‌வ‌ச‌மாகிடுங்க‌ள்
இளைய‌வ‌ர்க‌ள் நாளைய‌
த‌லைவ‌ர்க‌ளாக‌ட்டும்...

சொந்த‌ சொகுசுக‌ளை குறைத்து -எதிர்கால‌த்தை
சொர்க்க‌மாக்கிடுங்க‌ள் க‌ல்வியை -எல்லாருக்கும்
சொந்த‌மாக்கிடுங்க‌ள்...



No comments: