Saturday, December 29, 2012

வேறுபாடுகள்



பிறந்தவீட்டு மகிழ்வுகளோடு
புகுந்தவீட்டுக்குள் நுழைந்து
வருடங்கள் ஒன்றானது
வசந்தகால விடுமுறையில்
வசதியான மாற்றங்களோடு மீண்டும்
அம்மா வீட்டுக்கு ஆனந்தமாய்...
உள்ளமெல்லாம் மகிழ்வோடு
நெஞ்சமெங்கும் நேசத்தோடு எனக்கு
ஆரத்தழுவின வரவேற்பு
ஓர் விருந்தாளியைப்போல‌
அத்தனை கவனிப்புகள்
அதிரடியான கனிவுகள்...
அதே வீடு
அதே அம்மா
அதே சூழல்
அதே சுவர்
அதே அறைகள்
அதே கதிரை
நான் மட்டும் புதிதாக என்
மனம் மட்டுமோர் வேறுபாட்டை உணர்ந்தது
நின்றாலும் இருந்தாலும்
இறந்த காலத்திலிருந்த இன்பங்கள்
இப்போது இல்லாமலிருந்தது என்
சொந்த இடம் இதுவல்லவென்ற‌
மெல்லிய உணர்வு இழையோடிக்கொண்டிருந்தது!!

No comments: