Saturday, December 29, 2012

அவள்



ஆதியிலே
ஆண்டவனுக்கும் புரிந்தது
ஆண்மகனொருவன் அவனியிலே
தனித்திருந்திட முடியாதென்று...
துணையாய் தந்தான் பரிசை
மனைவியாய் தந்தான்
அவனில் சரிபாதியாகிட‌
விலாவெடுத்து பங்கிட்டுவைத்தான்
அவளும் அவனும் சரிபாதி பிறகேன்
ஆடவர் தம்மை
உயர்த்திக்கொள்வது ஆளுமையில்???
நின்றால் அவளும் நிற்பாள்
நிமிர்ந்தால் அவளும்
நிமிர்ந்திடுவாள்
நீ சாதித்தால் அவளும்
சாதிப்பாள் நீ
சண்டையிட்டால் அவளும்
சண்டையிடுவாள்...
தாய்மையின் புனிதத்தை
சாதகமாக்கிவிட்டாய் அவளை
பலவீனப்படுத்திக்காட்ட‌
இதைத்தவிர இல்லையுனக்கு
தனித்திறமையொன்று...!!
மித்திரன் வாரமலர் (2006)

No comments: