Saturday, August 8, 2015

கவிஞர் பிரகாசக்கவி அன்வர் அவர்களின் "தடம் தொலைத்த தடயங்கள்" கவிதை நூல










எழுத்தாளர் ரிம்ஸா முகம்மத் அவர்களின் " அறுவடை" நூல் வெளியீட்டின் போது...








ஓர் வாசகியின் கடிதம்



உன் எழுத்துக்கள் கண்டு
ஏராள நாட்களாகிவிட்டது
எழுது ஒருமுறை எழுது
காதல் பற்றி எழுது எனக்காய்
காற்றைப் பற்றி எழுது உன்
கவிதை மீதும் காத லாதலால்
காதல் பற்றி எழுது....


வீதிகளிலும் விலகிடாத நடையெழுது
விரல் பிடித்திருந்த வினாடிகளையெழுது
இதழ்கள‌றியா முத்தங்களை எழுது
இள‌கியோடிய மொத்தங்களையு மெழுது...

கண்களுக்குள் தொலைந்த கனவுகளையெழுது
கனவுகளுக்குள் அலைந்த சலனங்களையெழுது
காதல் தந்த கவிதை பற்றியெழுது
கவிதை தந்த காதல்பற்றி எழுது...

அலைகடலென அலைமோதும்
நிலமைகள் குறித்தெழுது
வலையிடை சிக்கித்திணறிய‌
கவலையினை சொல்லியெழுது...

விழிகளுக்குள் தொலைந்ததை எழுது
வலிகளுக்குள் தொலைத்ததை எழுது
வழிகளை அடைந்ததினை எழுது நீ
தெளிவாய் நடப்பது பற்றியெழுது...


காதல் பற்றி எழுது ஒருமுறை
எனக்காய் காதலை எழுது....