Wednesday, August 6, 2014

ஒருநாள் நானும் ஜெயித்திடுவேன் -தினகரன் வாரமஞ்சரியில் (19.10.2014)

விழுந்த இடத்தில் முளைத்திடுவேன்
விதியை துடைத்து எறிந்திடுவேன்
அழுத‌ நாட்களை மறந்திடுவேன்
அழகிய வாழ்வை நெய்திடுவேன்!

விழுத்திய மனிதரை மறந்திடுவேன்
விபத்தாய் எதையும் நினைத்திடுவேன்
தழும்பை பார்த்தே அழுதிடேன்
தரணியில் பெயரை நிலைத்திடுவேன்!

முயற்சி0யை  மனதில் இருத்திடுவேன்
முழுமனதாய் எதிலும் இறங்கிடுவேன்
உயர்ச்சியை மட்டும் விரும்பிடுவேன்
உலகமே எதிர்த்தாலும் நிமிர்ந்திடுவேன்!

வ(ழி)லிகளே வாழ்க்கையென உணர்ந்திடுவேன்
வருத்திய வழிகளை மறைத்திடேன்
ஒளியை பிடிக்க ஓடிடுவேன்
ஒருநாள் நானும் ஜெயித்திடுவேன்!!