Monday, March 13, 2017

கற்கவழி செய்குவீர்...






சோறில்லையென்ற நிலைவந்தபோது
ஜகத்தினையழிக்க ஓர் பாரதியில்லை
காரில் வந்திறங்குவோர் கண்களில்
கடுகளவிலும் கருணையில்லை!

பாத்திரமேற்று அலையுமெனக்கு
பிச்சையிடும் அவமானம் வேண்டாமே
ஏக்கத்தோ ட‌லையுமெனக்கு கல்வி
ஏட்டினைத் தாரீரோ....

பெற்ற அன்னையின் பசியாற்றவே
உற்ற சோதரனை ஆற்றிதேற்றவே
கற்ற கல்விதான் காக்குமறிவீர்
கற்கவழி செய்குவீர்...

பெற்ற கடனடைப்பேன் உயர்ந்து
பெருவாழ்க்கைதனைக் காண்பேன் நீவீர்
போற்றஓர் வழியடைவேன் விரைந்து
போடுவீர் புத்தகவரங்களை...!!