கடந்த காலத்தின்
கறைகளை
நடந்த பாதத்தின்
வலிகளை
உடைந்த சிலைகளின்
புலம்பல்களை
தடுத்து நிறுத்திடவோர்
எதிர்காலமுண்டென்றால் இன்று
தீயில் நடப்பதும் நன்றே!!
இழப்புக்கள்
பலாத்காரமாய் சந்திக்கவேண்டிய
பலவந்தம்...
விரும்பியோ விரும்பாமலோ
விதியின் வழியில்
வழிமறித்திடும் நிஜங்களிவை...
நாளை பார்த்திட முடியுமெ ன்ற
தற்காலிக பிரிவு முண்டு
நாட்கள் சென்றாலும்
நினைவுகளை மட்டும் சுமந்திடும்
நிரந்தர பிரிவுமுண்டு...
காலவோட்டத்துக்கு பின்னால்
கட்டளை போலோட வேண்டிய
கடப் பாடுண்டெமக்கு
நிதர்சனங்களை சுமந்துகொண்டு
நடைபோட வேண்டியது
நமக்கான வாழ்வியல் சட்டங்கள்...
தமிழுக்கு மரணமில்லையென்றால்
தமிழ் காத்த தலைவர்களுக்கும் மரணமில்லை
அவர்களின் சுவாசம்
மண்ணின் மறைவு வரையில்
தமிழோடு சுவாசித்துக்கொண்டேயிருக்கும்
காலமவர்களை அசைபோட்டுக்கொண்டேயிருக்கும்...
பலாத்காரமாய் சந்திக்கவேண்டிய
பலவந்தம்...
விரும்பியோ விரும்பாமலோ
விதியின் வழியில்
வழிமறித்திடும் நிஜங்களிவை...
நாளை பார்த்திட முடியுமெ ன்ற
தற்காலிக பிரிவு முண்டு
நாட்கள் சென்றாலும்
நினைவுகளை மட்டும் சுமந்திடும்
நிரந்தர பிரிவுமுண்டு...
காலவோட்டத்துக்கு பின்னால்
கட்டளை போலோட வேண்டிய
கடப் பாடுண்டெமக்கு
நிதர்சனங்களை சுமந்துகொண்டு
நடைபோட வேண்டியது
நமக்கான வாழ்வியல் சட்டங்கள்...
தமிழுக்கு மரணமில்லையென்றால்
தமிழ் காத்த தலைவர்களுக்கும் மரணமில்லை
அவர்களின் சுவாசம்
மண்ணின் மறைவு வரையில்
தமிழோடு சுவாசித்துக்கொண்டேயிருக்கும்
காலமவர்களை அசைபோட்டுக்கொண்டேயிருக்கும்...