Tuesday, February 18, 2014

என்னதான் செய்யவேண்டுமென்று நீங்க நினைக்கிறீங்க????

பெண்களுக்கெதிராய் நீட்டப்படும் கேள்விகள் எந்த சந்தர்ப்பத்தில் திருப்தியாகும் அல்லது விடைபெற்று சமாதியாகுமென்று புரியவில்லை உங்களுக்கென்டாலும் புரியுதா நண்பர்களே இது இப்படித்தாங்க ஆரம்பிக்குது ஆனால் முடிவுதான் இன்னுமில்லை.

01. 18‍ 20 வயதுக்குள்ள விரும்பியவனை திருமணம் செய்துகொண்டால், 'பாரு ஆடுகாழி இந்த வயசில விருப்பத்துக்கு புருஷன் தேடிக்கொண்டா...'

02. 28 வயதுக்கு மேல் திருமணம் முடிக்காமல் இருந்தால், 'என்ன ஒன்றும் பார்க்கவில்லையா? இப்ப காலம் சரிதானே அப்படி இப்படியென்று இறுதியில் முதிர்க்கன்னியென்ற முத்திரையோடு நிற்கவிடுவர் (இந்த வயதுக்காரருக்கு இன்னொரு சிறப்புமுண்டு அதாவது, இத்தனை காலம் காதல்வலையில் வீழாமல் அம்மா அப்பா பிள்ளையாக இருந்தபோது தூக்கிவைத்த சமூகந்தான் முதிர்க்கன்னியென்ற முக்காட்டை சடுதியில் போட்டு அழகுபார்ப்பர்)

03. அப்பெண், திருமணம் முடித்து ஒரு வருடம் கடந்துவிட்டால், 'இன்னும் ஒரு விஷேசமுமில்லையா?

04. அதுவே வருடங்கள் பலவற்றை தொட்டுவிட்டால் 'மலடி' யென்ற மகுடத்தை பகிரங்கமாகவே வழங்கிடுவார்

05. ஒரு பெண்ணுக்கு ஒரேயொரு பெண்குழந்தை மட்டும் பிறந்துவிட்டால், 'என்னம்மா பொண்ணு மட்டுந்தானா ஒரு பையன் இருந்தா நல்லது நாளைக்கு பின்னுக்கு ஆம்பிள பிள்ளதான் உதவுவான்' என்றொரு குதர்க்கம்

ம்ம்ம்.... இப்படியே வேண்டாக் கதைகளை சொல்லிக்கொண்டு போனால் கடைசியில ஒரு பெண் எப்படித்தான் இருக்கவேண்டும் என்னதான் செய்யவேண்டுமென்று நீங்க நினைக்கிறீங்க????

No comments: