Friday, February 14, 2014

தமிழ்லீடர் இணைய இதழில் எனது கவிதை 12.02.2014


http://tamilleader.com/?p=27616



இனியும் வேண்டாம்…..!!!

 
காதல் பிரிவு





வாழ்வின் பாதியும் நீதான் என்
இதயத்தின் பகுதியும் நீதான்
தாழ்வின் கோரம்வரும்போதும்
தாங்கிடுவேன் உன்னை நானென்று
தாராளமாயுரைத்த கண்மணியே
தாங்காச்சோகந்தனை தந்து
தாலிபெற்று சென்றதென்ன?
நோயாய் நீகொளுத்திய தீதா னின்றும்
நொடியிடை வெளியின்றி
பொடிப்பொடியாக்கிப் போட்டது
தத்தளிக்கும் தளிராய்
தனித்துவிடப்பட்டிருக்கின்றேன்
நினைவுகளை கொன்றழித்திடமுடியாது
செத்துபிழைக்கின்றேன் எப்படியடி
சேர்த்தெல்லாவற்றையும் புதைத்திட்டு
செந்தாமரையாய் புன்னகைக்கின்றாய்?
நிமிடத்துக்கொருமுறை சொல்வாயே என்
நிம்மதியெல்லாம் நான்தானென்று
அடிக்கடியணைப்பாயே கண்ணாளனே
அழிவொன்றில்லாது நமைபிரிப்ப
தரிதென்று
என்னவென்றடி எல்லாவற்றையும்
புதைத்திட முடிந்தது
மணிமணியாய் செதுக்கி
மாளிகையா யெழுப்பிய‌
காதலிதயத்தை கலைத்தெறிவதெப்படி
நிறைந்திருக்கும் உன்
நினைவுகளை நீக்கிடும் வழியறியாது
உறைந்திருக்கின்றேன்
ஒற்றைநொடி திரும்பிப்பார்த்திருக்கலாம்
ஓராயிரம் ஆழம்பொதிந்த நம்
காதல் நினைவுகளை
ஆனந்துத்துக்கும் அன்புக்கும் குறைவிலா
அந்த நிமிடந்தனையொரு நொடி
மீட்டியிருக்கலாம் என்னிடம்
ஓடிவந்திருப்பாய்….
இனியும் வேண்டாம்
இரவான எனதுகளில்
ஒளிநிரப்ப வேண்டாம்
நிம்மதி தேடும் வழிகளெனதில்லை
நிகழ்ச்சிகளை நிரப்புவதில் உடன்பாடில்லை
உன்பாதை வேறு
எனது பயணம் வேறு
பிரிவோம் செல்வோம் இனியொருமுறை
சந்திக்காதபடி…
- த.எலிசபெத் (ராஜ்சுகா)

No comments: