Monday, December 24, 2012


முட்க‌ள் முளைக்குஞ்சாப‌ம்!!

வாழ்க்கை ஒரு நாடக மேடை
வாழ்தல் அதில் வேடக்காட்சி
உறவுகள் இங்கு பாத்திர அமைப்பு
உரிமைகள் எல்லாம் பொய்யின் அமைப்பு...

உன்னகை வெறும் அலங்காரச் சாயந்தான்
எண்ணினால் ஒவ்வொன்றும் பிரம்மையின் வடிவம்தான்
நட்பெல்லாம் வெறும் நேரக்கடத்தல்தான்
உட்பொருள் ஒன்றிலா மாயக்கிடக்கைதான்...

அன்பென்ற பொருளோ அட்டைப்பட புகழ்ச்சிதான்
ஆழமா யூடுருவா ஆயுள்ளில்லா பூச்சிதான்
வம்பென்றே விலகிடும் வலிமையில்லா உறவுதான்
நம்பிநீயும் சென்றிட்டால் வாழ்க்கையுனக்கு வலியேதான்...

பாசமழையில் நனைத்திடும் வார்த்தையெலாம் பொய்மைதான்
வாச‌ம்வீசும் ம‌ல்லைகையாய் ம‌ல‌ரும்நேச‌ம் வெறுமைதான்
தேச‌ச்சுவ‌ரில் ம‌னித‌மெலாம் தோற்றுப்போன‌ காய‌ந்தான்
நேச‌க்கொடிக‌ள் வ‌ள‌ர்த்துவிட்டால் முட்க‌ள் முளைக்குஞ்சாப‌ந்தான்...!!!

No comments: