Wednesday, December 26, 2012


நிஜங்களாய்....

நினைக்க மறந்தாலும்
மறக்க நினைக்காதே இதை
எங்கோ கேட்ட ஞாபகம்...

நிஜங்களை தொலைத்துக்கொண்டிருக்கும்
நிகழ்காலத்தில் என்னை
நினைவுபடுத்திக்கொள்ளவே
உறவின் உத்தரவாதத்தை
உறுதிப்படுத்துக்கொள்ளவே அடிக்கடி
என் நினைவுகளை
உன்னிதயத்தில் காட்சிப்படுத்திப்போகிறேன்
கட்டாயப்படுத்திப்போகிறேன்...

பகட்டுக்காய் பழகிடும்
பாசங்கள் மத்தியில்
நிஜ‌மாய் நெருங்கிடும் சொந்த‌ங்க‌ளை
விட்டு வில‌கிட‌
எட்டி ந‌ட‌ந்திட‌ எவ‌ர்தான் விரும்பிடுவார்...

ந‌ட்பாய் ந‌ம‌துற‌வை காத்திட‌வே
நானும் முய‌ற்சிக்கிறேன் நீயும்
ந‌ழுவ‌ விடாது ந‌ட்போடு
சேர்ந்திட‌த்தான் வாஞ்சிக்கிறேன்...‌

No comments: