Wednesday, December 26, 2012


சமரசம் காண....


கணவனும் மனைவியும்
கண்ணும் மணியுமாயிருந்திடனும்....

பெற்றவர்கள் பிள்ளைகளிடம்
ஓரடி விலகினாற்போல இருந்திடனும்...

ஒன்றாய் பிறந்த உறவுகளுடன்
ஒன்றரையடி தள்ளினாற் போலவிருந்திடனும்...

நாலும் பேசும் நண்பர்களிடம்-நற்புடனே
நான்கடி நகர்ந்தாற்போலிருந்திடனும்...

சொகுசாய் வந்து போகும்
சொந்தங்களிடம்-ஐந்தடி
எட்டினாற் போலிருந்திடனும்...

நித்தம் சூழ நிற்கும்
சுற்றம் சூழத்தாரிடம்- சுமுகமாய்
எமதுறவு சுழன்றிட்டாலே
சூறாவளியாய் சுழற்றியடிக்கும்
பகைமையை விரட்டியடித்து
சமரசமாய் வாழ்ந்திடலாம்..!!!

No comments: