Sunday, December 30, 2012

துர்ப்பாக்கியக்காதல்



நீ
மறுத்துப்போன இதயம்
மறக்கமுடியாமல் நிதம் நிதம்
மரித்துக்கொண்டிருக்கின்றது

காதல்
வெறும் நேரக்கடத்தலாய்
வேட்கைக் கதவுகளாய்
காணத்தெரிந்த உனக்கு
வெந்துபோன எனதித‌யத்தை
புரிய முடியவில்லையா

நான்
இன்னும் மரிக்கமுடியாமல்
மனதோடு போராடுகின்றேன்
உன் ஒற்றைவார்த்தையின்
ஏக்கத்தோடு

நமது
கடந்த காலங்களின் பசுமை எனக்குள் 
கல்வெட்டாய் வலிக்கின்றது
கல்லாய்ப்போனதா நான்
காதலோடுபார்த்த உன்னிதயம்???

இரக்க‌ம் தெரிந்திருந்தால் என்
இதயம் அறிந்திருப்பாய்
உறவு உண்மையாயிருந்திருந்தால் என்
உள்ளத்தை அறிந்திருப்பாய்
மனம் உணர்ந்திருந்தால் என்
மாறாக்காதலை அறிந்திருப்பாய்

காலங்கடந்த ஓர்நாளில்
நம் சந்திப்பு வெறும்
கண்ணீர்துளிகளால் மட்டுமே
சந்தித்துக்கொள்ளும்

No comments: