Wednesday, December 26, 2012


நீ நட‌ந்த பாதையிலே

நீ நட‌ந்த பாதையிலே
நான் ந‌ட‌ந்து பார்த்தேன்
புஸ்ப‌ங்க‌ளெல்லாம் புற்க‌ளாக‌
பூக்க‌ளெல்லாம் க‌ற்க‌ளாக‌...

பாத‌ம் ப‌ட்ட‌ இட‌ங்க‌ளில்
ப‌யண‌த்தின் வ‌டுக்க‌ள் ப‌திந்திருந்த‌து
நீண்ட‌ தூர‌ த‌ட‌ய‌ங்க‌ளில்
நீ க‌ண்ட‌ துன்ப‌ங்க‌ள் வ‌ழிந்திருந்த‌து...

துணையின்றி தூர‌மான‌ கிழ‌க்கு
துடுப்பாக‌ உன்னுட‌னே வ‌ந்திடும்
விழிதுடைக்கும் க‌ர‌மாக‌
விடிய‌ல் த‌ர‌ தொட‌ர்ந்திடும்...

உன் பாதைக‌ள் நீள‌ம்தான்
உன் வாதைக‌ள் ஆழ‌ம்தான்...

த‌ட்டிக்கொடுத்து வாழ்வை
எட்டிப்பிடிக்க‌ வ‌ந்திட்டேன்
விட்டுப்போன‌ உற‌வை
க‌ட்டிக்காக்க‌ சிந்தித்தேன்...

அன்புக்குள் ஆற்றாமைக‌ள் அற்ப‌மே
அர‌வ‌ணைப்புக்குள் துன்ப‌ங்க‌ள் சொற்ப‌மே இப்பெறா
அன்னைக்கு நீயெப்போதும் சிற்ப‌மே
ஆருயிரே நானெப்போதுமுன் ப‌க்க‌மே...

No comments: