Sunday, December 30, 2012

ஒரு தனியார் வானொலியின் பிரபலமான நிகழ்ச்சி ஒன்றுக்காக எழுதப்பட்ட பாடல்வரிகள். குறிப்பிட்ட இசையமைப்பாளரால் கேட்கப்பட்ட இப்பாடல் வரிகளை அவர் ஏற்றுக்கொள்ளாதது ஏன் காரணம் என்ன என்பது எனக்கு இன்றுவரை புரியாத புதிர்தான்


ஓ..தோழனே//...என் தோழனே தோழியே



ஓ..தோழனே//...என் தோழனே தோழியே
வேதனை தீயதை கொன்றிடவே....ஓ.....

சொந்தமாய் பந்தமாய்
சொல்லிடு சொல்லிடு
சோகமே தொலைக்கவே
என்னிடம் சொல்லிடு...

வானமே எல்லையே
வந்திடு முல்லையே
வறுமைதான் தொல்லையோ-இன்ப
வாழ்விலினி இல்லையே.....

தோழனே என் தோழனே
சொந்தமாய் பந்தமாய்
சொல்லிடு சொல்லிடு -சோகமே
என்னிடம் நீயும் சொல்லிடு....

1.வேருக்குள் வீசிடும்
பூக்களின் வாசமும்
உயிருக்குள் வலித்திடும் -உந்தன்
நேசத்தின் ஏக்கமு.....ம்..ஆ....ஆ
ஊமையாய் காரிருள்
என்னிடம் உன்னிடம்
உயிரதை உருக்கிடும்-எந்தன்
கரமதை வாங்கிடு...
தூங்கிடும் இரவினில்
துக்கம் தரும் தொல்லைகள்
தொலைத்திட்டு சுவாசிக்க
அருகினிலிங்கே வசந்தம்...

பூகம்பம் வரட்டுமே
புயலாகிப்போகட்டும்
புன்னகை சூடிக்கொள்ள
புண்களும் ஆறுமே //

தோழனே/// என் தோழியே
சொந்தமாய் பந்தமாய்
சொல்லிடு சொல்லிடு
என்னிடம் நீயும்... சொல்லிடு
சோகமே... என்னிடம் சொல்லிடு

தோழனே...என் ...தோழியே...



No comments: