Saturday, December 29, 2012

ஆசையில் ஓர் கடிதம்



அன்புள்ள விதியே
உனக்கொரு கடிதம்
துன்பத்தை மட்டுமேன்
துணையாக தந்தாய்...

பண்புள்ள விதியே
பரிவாக எனை பார்த்திடு
கண்ணீர் பிள்ளையென்னில்
கருணையே வரவில்லையா???

பாசமுள்ள விதியே
படைத்தலில் பிழையோ
மாசற்ற எனதன்பை மனங்கள்
மண்ணுக்குள் புதைப்பதேன்???

நேசமுள்ள விதியே
நேயமற்று நடப்பதேன்
வேஷமிடும் மாயைகளுக்கிடையில்
வேதனையின் உச்சத்தை தருவதேன்...

பரிவுள்ள விதியே
கரிசனையும் இல்லையோ
தரிசு நிலமா யென்னை
தனியாய் தவிக்கவிடுவதேன்???

இதயமுள்ள விதியே
சதையமில்லாது நடந்துகொள்வதேன்
உதயமாகும் விடியல்களெல்லாம்
உதிர்ந் துதிர்ந்து போகின்றதே...

விடைதருவாய் விதியே
நடைபோடும் கண்ணீரலைகளை
தடைசெய்ய விரைவாய் வா
தடுமாற்றங்களை தடுத்திட வா...


No comments: