Friday, October 16, 2015

யோசிக்கமுடியா வுலகில் வாழ்ந்தோம்

பேசிப்பேசி நேசம் வளர்த்தோம்
நாசிவரையில் பாசம் நிறைத்தோம்
வாசித்தறியா கவியில் திளைத்தோம்
யோசிக்கமுடியா வுலகில் வாழ்ந்தோம்

பாசிப்போல படிந்துகொண்டோம்
தூசிவிழுந்தாலும் துடித்துப்போவோம்
ஏசிப்பேசிய கோபங்களறியோம் -நமக்குள்
ஆசியளிக்கும் இறைகளானோம்....

ஊசிக்குள் நுழைந்திடும் விந்தைக்கற்றோம்
வீசியெறிந்திடா உறவை காத்தோம்
ஓசிவாங்காமல் கவிதை படைத்தோம்
ராசியானவர்களாய் நாமுமானோம்...

கூசிடும் வார்த்தைகள் அழித்துவிட்டோம்
நேசித்திடும் வித்தைகளை அறிமுகம்செய்தோம்
பேசிப்பேசி நேசம் வளர்த்தோம்
யோசிக்கமுடியா வுலகில் வாழ்கின்றோம்...

No comments: