Tuesday, January 8, 2013

உன்னைப்போல‌


நீருக்குள் விழுந்த குழந்தையாய் உன்
நினைவுகளுக்குள் நான்
மீளமுடியாதவளாய்...

எந்த நொடிகளை 
கரைத்துவிட நினைக்கின்றேனோ
அந்த நினைப்புக்களே என்
நிம்மதிகளை கொலைசெய்துகொண்டிருக்கின்றது

தூரத்தில் தொலைந்திடவே எத்தனிக்கின்றேன்
துரத்திக்கொண்டே வருகின்றது
நம் கடந்தகால பசுமைகள்

உன்னை மறாந்துவிட்டால்
என் ஜீவன்
சுவாசம் சுமக்குமா என்பதின்
ஐயம் இன்னும் தீரவில்லை...

நேசம் இத்தனை நிந்தையென்றறிந்திருந்தால்
நானும் கா த(ழி)லித்திருந்திருப்பேன்
நேசமில்லாமல் 
ன்னைப்போல‌....!!!!!  


No comments: