Sunday, January 13, 2013

ஆடிப்பாடி மகிழுவோம்




பூமியில் பாவங்கள் பெருக்கிற்று
புனிதங்கள் அதனோடு ஒழிந்திற்று
பாதாளம் விரைவாய் எழுவதற்குள்
பாலகன் இயேசுவே அவதரித்தார்

அகிலத்தை ஜனிப்பித்தவர்
தொழுவத்தில் ஜனனித்தார்
எளிமையின் புனிதத்தை
எல்லோருக்கும் சமர்ப்பித்தார்

மாநுடத்தாயில் கருவில்
மகத்துவதேவன் வந்துதித்தார்
தன்னுயிரை ஈந்திட தரணியில்
தாழ்மையின் தனயனாய் வெளிப்பட்டார்

வழியும் சத்தியமும் ஜீவனுமாய்
உலகுக்கு அன்பான குருவானார்
அழிவின் பாதையை உணர்த்திட‌
அவரே கருவில் உருவானார்...


ஆடிப்பாடி மகிழுவோம்
ஆனந்தத்திருநாளை கொண்டாடுவோம்
ஆண்டவர் இயேசுவின் அன்பதின்
ஆற்றலை நாமும் பெற்றிடுவோம்


நல்ல தீர்மானங்கள் கொண்டிடுவோம்
நாளும் அதனுடன் வளர்ந்திடுவோம்
உலக இன்பங்கள் வெறுத்திடுவோம்
உன்னத நிலையதில் நடந்திடுவோம்!!


(19.12.2012 அன்று பிரசுரமானது)








No comments: