Thursday, January 17, 2013

அழிந்தே போனது...





ஒரேநொடியில் எல்லாமே
உதிர்ந்து போனது

விண்ணை முட்டிய‌
வாலிபக் கனவுகள்

விதையாய் விழுந்த‌
வாழ்க்கை கவிதைகள்

வகை வகையாய் சேர்த்த‌
எதிர்கால கதவுகளத்தனையும்
அக்கினியாய் விழுந்துதெரித்த‌
அந்த ஒற்றைவார்த்தையில்
சிதந்தே போனது...





எதிர்பார்ப்புக்கள் மட்டுமல்ல‌
எனதான எல்லாமே
அடையாளமில்லாது அணுவணுவாய்
அழிந்தே போனது...

எல்லாமே அறிந்திருந்தும்
எனக்குள் ஒரு 
இதயமிருப்பதை மட்டும் நீ
அறியாமல் விட்டது அநியாயம்தான்!!

No comments: