Thursday, January 17, 2013

இப்போதும் உனக்காய்.....





பூவாய் இருந்த உனக்குள்
பூகம்பத்தின் வேகம்
எங்கிருந்தது?

கோபம் அறியேன் 
கொடுமைகள் புரியேன் என்ற‌
வார்த்தைகளெல்லாம்
உயிரற்ற உடலங்களா
இத்தனை சீக்கிரத்தில்
பிணவாடை வீசுகின்றது?

அந்த புன்னகைக்குள்
முட்கம்பிகளை எதிர்பார்க்கவில்லை
அழகான அப்பரிவுகளில்
ஆயுதங்கள் ஒளிந்திருக்குமென‌
அறியவேயில்லை
கபடமறியா அப்பார்வைக்குள்
கருநாகம் ஒளிந்திருக்குமென‌
கனவிலேனும் தட்டுப்படவில்லை...

எனக்காய் உதிர்த்த‌
அத்தனை நிமிடஙகளும்
மணக்கும் மல்லிகையாய் சேமித்துவைத்தேன்
எப்படி மனம் வந்தது
தீயிட்டுக்கொளுத்தி
திருநீறு பூசிக்கொள்ள???

இப்போதும் இதயம் உனக்னை
குழந்தையாய்த்தான் பார்க்கின்றது
மீண்டும் வந்துவிடமாட்டாயா வென்று

இவையெல்லாம் மனதுக்குள்
ஆழமாய் பதிந்திடும் வேர்களல்ல‌
ஆத்திரத்தில் முளைத்த நார்கள்மட்டுமே...

இதயம் இப்போதும் உனக்காய்
தாயின் ஏக்கத்தோடு...

No comments: