Saturday, January 5, 2013

தோல்விகள் அழிவுக்கல்ல‌

      உண்மை 
      ஊமையாயிருந்தாலும்
      உயிரோடு வாழும்
      பொய்மை
      போரிட்டு எழுந்தாலும்
      பொசுக்கென்று மாளும்!!



விழுகின்ற நீரால்தான்
வெளிச்சத்தை தரமுடிந்தது
குனிகின்ற கிளையால்தான்
கனிகளை தாங்கமுடிகின்றது
புதைகின்ற வேரால்தான்
புரட்சிகளை காணவியல்கின்றது
விழுகின்ற அடியால்தான் உன்னால்
வாழ்க்கையை அறியமுடியும்
எழுகின்ற துணிவினால்தான்
மனிதனாய் மிளிரமுடிகின்றது


     ஒவ்வொருமுறையும்

     மறந்தேபோகின்றேன்
     உன் நினைவுகளை
     மறந்துபோவதற்கு!



கடுஞ்சொற்களெனை காயப்படுத்தவில்லை
சுடும் பார்வையதும் கலங்கச்செய்திடவில்லை எங்கேனும்
நெஞ்சிலெட்டியுதைக்கும் குழந்தையை
நஞ்சூட்டிக்கொன்றிடுந் தாயுண்டோ??



     உதடு துடிக்கும்
     உண்மைக்காய் வாதாட‌
     உள்ளம் துடிக்கும்
     உறவினை காப்பாற்ற‌....



கடந்து வந்தவைகள்
பரீட்சையாக இருக்கட்டும்
கடக்க இருப்பவை
பெறுபேறாக மலரட்டும்!!


    தோல்விகள் அழிவுக்கல்ல‌
    அநுபவத்திற்கு
    வெற்றிகள் ஓய்வுக்கல்ல‌
    ஊக்கத்திற்கு!!


காயங்களே மருந்தாகும்
தோற்றுப்பார் காதலில்
சாயங்களே வானவில்லாகும்
வென்றுபார்!!










No comments: