Tuesday, January 1, 2013

  • தப்பு செய்திடவும்
         தப்புத்துக்கொள்ளவும்
        ஆயிரம் வழிகள் அகிலத்தில்
        அகலத்திறந்து கிடப்பினும் துளியேனும்
        இறையச்சம் மனதிலுறைந்தால்
        மனிதம் தளைத்துக்கொள்ளுமாம் மாநுட‌
        அன்பு நிலைத்துநிற்குமாம்

  • உள்ளார்ந்த நேசம்
         நொடிக்கொருதடவை இல்லையென்றாலும்
        அடிக்கொருதடவை நினைக்கத்தோன்றும்


  • துரோகத்தை தாங்கும் திடமும்
          துரோகியை மன்னிக்கும் மனமுன்
          உன்னிடமென்றால்
          உன்னை மிஞ்சிய மனிதமுமில்லை உன்
          குணத்தை விஞ்சிய புனிதமுமில்லை!!

  • அந்த இதயச்சுவரில்
          இந்த நினைவோவியத்தின்
          ஒற்றை கோடுகூட‌
          வரையப்பட்டிருக்கவில்லை
          வெறுமையாயுணரப்பட்ட ஓவியம்
          வெண்மையினால் தன்னைத்தானே
          தீட்டிக்கொண்டிருக்கின்றது!!


  • நிழல்கூட இருளில்
உனைவிட்டு நீங்கும்
அணையா நிலவாயென்
அன்புனை தாங்கும்!!


  • மனம்விட்டு எழுதுகின்றேன்
மனம்விட்டுப்போனதால் எழுதுகின்றேன் -எனையுன்
மனம்விட்டுவிட்டுப் போனதால் எழுதுகின்றேன்!!

  • வழியில் 
ஆயிரம்பேரை சந்திக்கலாம்
ஆனால் நம்பயணமோ
ஒரே பாதையில் மட்டுமே
இருந்திடல் வேண்டும்!!


  • காமநோய்க்கு
காதலை மருந்தாக்காதீர்கள்
காதல் புனிதமானது
நேரங்கடத்துவதற்காய்
நேசத்தை விலைபேசாதீர் சிலநேரங்களிலது
ஒருகுடும்பத்தின் வரலாற்றையே
வேறோடழித்துவிடலாம்
நேசம் நிஜமானது!!



  • என் எதிரிகளைவிட‌
துரோகிகளை நேசிக்கின்றேன்
என்னையவர்கள்
புதைத்துவிட்டு போனதால்தான் இன்று
முளைத்துக்கொண்டிருக்கின்றேன்


  • கீழே கிடப்பதெல்லாம்
குப்பைகளுமல்ல‌
மேலே உயர்வதெல்லாம்
கோபுரங்களுமல்ல‌

No comments: