Thursday, January 17, 2013

முடியுமென்ற நாதம்








சிரித்துக்கொண்டே அழுவது பற்றி
அத்தனை சீக்கிரத்தில் அறிந்துகொண்டேன்
மரித்துக்கொண்டே உயிர்ப்பதுபற்றிய
மாநுடவியலையும் உணர்ந்துகொண்டேன்...

தோல்விகளெல்லாம் மரணமல்ல‌
எழுதல்பற்றியதான விளக்கங்கள் எனும்
வாழ்தல் நுட்பங்களை
வலிகளினூடாக கண்டடைந்தேன்...

வெற்றிப்பாதைகள் எப்போதும்
வெட்டாந்தரையும் வெறுமையுமே
பற்றிப்பிடித்தலொன்றே
பசுமையினையடையும் பிரகாசங்கள்...

நம்பிக்கை எப்போதாவது 
நலிவடைந்தே போகும் நம்மீது
நம்பிக்கை இல்லாதவரையில்
நன்மையே ந்டக்கும் நம்மால்
முடியுமென்ற நாதம் 
ஒலித்துக்கொண்டிருக்கும் வரையினில்...

No comments: