Thursday, January 24, 2013


01.வாழ்தல் பற்றிய புரிதல்
வா வென்றவுடன் வருவதில்லை
வீழ்ந்து எழும்போதும்
விபத்தில் தப்பும்போதும்
தா னாய் வந்துவிடுகின்றது!!


02.பலவந்தமாய்
உமைவிட்டுப் போகும் எதையும்
துரத்திப்பிடிக்காதீர்
சிலநேரங்களில்
அதுவே உனக்கான
அதிஸ்டக்கதவாகவும் இருக்கலாம்!!



















03.உன்னால்
வலிகளை மட்டுந்தான்
கொடுக்கமுடியும்
என்னால்
வழிகளை
கொடுக்கமுடியும்
ஏனெனில் நான்
துரோகங்களிலிருந்து
புதிதாய் முளைத்தவள்!!










04.சிலருக்கு
முகமூடிகள்தான் அழகு
நிஜங்கள் வெளிப்படும்போது
நிலமைகள் கலவரப்பட்டுவிடுகின்றது
அவர்களுக்கு
மாயைகள்தான் அழகு!!



05.துன்பத்தில் உன்னால்
சிரிக்கமுடியுமா
ஏன் முடியாது
முடியும்!
துளியளவு துரோகத்தில் கூட‌
துவண்டுவிடும் நானே
முதன்முதலாய் சிரிக்கின்றேன்
வலிகளுக்குள்தான் வாழ்க்கை
வழிகளுக்கதுதான் நம்பிக்கை!!




No comments: