Friday, January 25, 2013

படிக்க முயலாதே...


தயவுசெய்து
மனிதனை படிக்க முயலாதே
பாவம் நீ
சந்தர்ப்பம் வரும்வரை காத்திரு
சட்டென முடிவுகொள்ளாதே எவ‌ரும்
நல்லவரே வேளை வரும்வரையில்...

உடனடியாய் உறுதிபடுத்தாதே
உறவுகளெல்லாம்
உயிராய்த்தான் விம்பம் காட்டும்
தயவுசெய்து
மனிதனை படிக்கமுயலாதே..

காற்றெனத் தழுவும்
கத்தியாயும் வீசும் இலாபமில்லையெனில்
கசக்கியுமெறிந்திடும் கடதாசியாய்
வானவில் திரைபோடும்
வாயார வாழ்த்துரையுமீந்திடும் நீ
வலுவிழந்த தறிந்தால் வழியிலே
விடைகொடுத்து  மனுப்பிடும்
தயவுசெய்து
மனிதனை படிக்க முயலாதே..

உண்டது ஓரிலையில்
உற‌ங்கியதுமே ஒன்றாகவே
என்றாலும்
உதவியொன்று நீ தரதவறின்
உன்நிலை பரிதாபமே
தயவுசெய்து
மனிதனை படிக்க முயலாதே...

No comments: