Friday, January 25, 2013

நாளை எதுவும் நடக்கலாம் (02)



கவிவடிக்கும் மையினை
காலம் உறிஞ்சித்துப்பிடலாம்
புவியதிரும் புரட்சிசெய்த
பேனையது உடைக்கப்படலாம்
நாளை எதுவும் நடக்கலாம்...

உடைத்து எறியப்பட்டது
உணவுசமைப்பதற்காய் எரிக்கப்படலாம்
உடைகளை துவைப்பதற்கு
உயிருள்ள விரல்கள் குறைக்கப்படலாம்
நாளை எதுவும் நடக்கலாம்...

எழுதிட நினைக்கும் நிமிடங்களில்
அழுதபடி யடுப்பூதிட நேரிட‌லாம்
தொழுதிடா வென் கரங்களில்
தொய்ந்துபோன ஈனக்குரலொலிக்கலாம்
நாளை எதுவும் நடக்கலாம்...

சுதந்திர சாம்ராஜ்யத்து சுவாசங்களில்
சுருதிகள் மரிக்கப்படலாம்
வதங்களால் வென்றெடுத்த வரிகளில்
வரட்சிகள் தென்படலாம்
நாளை எதுவும் நடக்கலாம்...

நாளையிதுபோல் எதுவும் நடந்திட்டால்
நானுந்தான் காரணம் இல்லை
நானேதான் காரணம்!

திருமணவுறவு இருமன நிறைவாய்
திங்களொலிபோல எழிலேற்றிட‌
வருகின்ற துன்பமெறிந்து தான்
வாழ்வினை படித்திடலாம்
புரிதலின் தொடக்கமும்
விட்டுக்கொடுப்பின் இறுதியுமே
விடைகாணா விவாகரத்துகளுக்கு
விதிசெய்திடும் வினையமென்கின்றேன்
ஏட்டில் பதித்தவள் நான் என்
வீட்டில் வித்திடுவதில் பிழையென்ன‌
இல்லறஞ்சிறக்க விட்டுக்கொடுத்தலின்
எல்லைவரை செல்வதில் தப்பென்ன
நாளை எதுவும் நடக்கலாம்...

விட்டுக்விட்டுக்கொடுத்ததா லவ் முற்றுப்புள்ளி
இன்னொரு புள்ளியிட்டு தொடங்கப்படலாம்
தட்டிக்கொடுத்து என்னையது
தனித்துவமாக எழுப்பியும் விடலாம்
நாளை எதுவும் நடக்கலாம்...

இரண்டில் ஒன்று
எப்படியும் நடக்கலாம்
திரண்டிடும் சவால்கள்
திறமையால் வெல்லப்படும் என்னால்
வாழ்தலுக்கான உத்தரவாதம்
வழங்கப்பட்டாயிற்று ஏனெனில்
இன்னு மோ ரிருமா தங்களில்
எனக்கு திருமணமாம்...!!









No comments: