Saturday, January 5, 2013


நின்றால் நடந்தால்
நினைவெல்லாம் நீதான்
இருந்தால் எழுந்தால்
இதயத்தில் சுகந்தான்
வந்தாய் நிறைந்தாய்
வழியெல்லாம் நிழலாய்
இணைந்தாய் கலந்தாய்
வாழ்வினில் துணையாய்!!

பேனா சிந்திய கண்ணீர்
தானாய் கவிதையானது
நானாய் சிந்திய கண்ணீர்
வீணாய் உதிர்ந்துபோனது

நானும்
சோதிடக்காரனைபோல
நேரத்தை கணித்துக்கொண்டிருக்கின்றேன்
நீ வரும்
நாட்களை எண்ணியெண்ணி

சிலநட்கள் மட்டுமே
தாங்கிய காம்பு
தாங்காத வலியோடு பார்த்தது
தன்னைவிட்டு உதிரும் மலரை
விட்டுவிடவும் முடியாமல்
ஒட்டிக்கொள்ளவும் முடியாமல்

எல்லாரும் சொன்னர்கள்
என்வாழ்க்கை இதுவென்று
எல்லாமவன் சொன்னது
ம(ண)ண்வாழ்க்கை மாயையென்று

முகத்திரை கிழியுமட்டும்
எல்லாரும் அழகானவர்கள்


அன்பும் பொறுமையும்
அகிலத்தை வெல்லும்
ஆயுதங்கள்

இணையாத 
இருகோட்டுகளை
இணைப்பது காதல்
இதயம் தவிர எதையும்
இணங்காணாதது காதல்

நல்லதையே
விதையுக்கள்
அறுப்பது உங்கள்
பிள்ளைகளாகக்கூட இருக்கலாம்!!

No comments: