Friday, January 25, 2013

கொலையினை புரிந்திடாதே!!


உயிர் கொல்லுதலை விட‌
மனங்கொல்லுதலே
மா பெருங் கொலையென்கின்றேன்

நொந்து நொந்து மரணித்திடும்
நோவினை தந்துவிடாதே -எவருக்கும்
உன் வார்த்தையில்
உன் குணத்தில்
உன் கோபத்தில்
உன் வெறுப்பினில்
உன் வேடிக்கையிலென்று
எதிலுமோர்
மர்மக் கொலையினை புரிந்திடாதே!!




No comments: