Friday, January 25, 2013

சாதித்துக்கொண்டேயிருப்பேன்!


உதிர்ந்து விழும் நீர்க்கொப்புளங்கள்
உயிரின் வலிகளை உணர்த்திச்செல்கின்றது
உணரப்படாத அந்த ஆத்மார்த்த நேசம்
உருப்பெறா கர்ப்பமாய் கலைந்துபோனது!

நிஜங்கள் அழிந்துபோவதில்லை
நீர்த்தும் போவதில்லை
வாதித்த வலிகளெல்லாம்
போதித்த வழிகளினூடாக‌
சாதிக்க அழைத்ததென்னை நானும்
வீதிக்கு வந்த விதி நினைந்து
சாதிப்பேன் சாதிப்பேன் சாதித்துக்கொண்டேயிருப்பேன்!

இடிக் குறங்கும் விழிகளாய்
அடிக்கு விடுபட்டு வந்தேன்
தடுக்கி விழுந்த தடயம்
முடக்கிய வழி திறந்தது
முயல்வேன் முயல்வேன்
எதுவந்தபோதும்
முயன்றுகொண்டேயிருப்பேன்!!!



No comments: