Friday, January 25, 2013


ஊருக்கெல்லாம் தெரியும்
நாம் காதலர்களென்று
உனக்கு மெனக்கும் மட்டுந்தான் புரியும்
நமக்குள் மோதலென்று

நாலும் ஐந்தும் அருகருகே
நானும் நீயும் பிரிவுக்குள்ளே
வீழும் துளிகள் அதிகமிங்கே
விடைகறியா வேள்விக்குள்ளே...

தயவுசெய்து என்
கல்லறைக்கு வந்துவிடாதே
உயிரின் உணர்வறியா உனக்கு
பிணத்தின் உறுதியை
உள்வாங்கிக்கொள்ள முடியாது

காதல்தான் 
துரோகம் செய்தது ஏனோ
கடவுளை
கோபித்துக்கொள்கின்றோம்

மலடியின் மனதைகூட‌
புரிந்த உன்னால்
நீயறிந்த இந்த‌
மங்கையின் மனதை
புரியமுடியவில்லையா?

No comments: