Thursday, January 17, 2013

கல்லறைப் பிணமாய்




                                                           
                                                       

நினைவுகளுக்குள் அடைபட்டு
மீளமுடியாதவளாய் நான்
விண்மீனாய் புன்னகைத்து
வண்ணமயிலாய் மகிழ்ந்தாலும்
சிறகையுடைத்து சிறைசெய்யும்
உன் கோபங்களில் நான்
கல்லறைப்பிணமாய்...

வேண்டுமென்றே வெறுத்தாலும்
வேண்டாமென்றே போகின்றது வாழ்க்கை
கரையுமில்லை ஓடமுமில்லை
கரைசேரமுடியா ஆழமென்று
கண்டவர்கள் சொல்லியும்
தரைவழியே சென்றிட‌
துளிக்கூட விரும்பியதில்லை தீயை
தொடத்துணியும் குழந்தையாய்...

உனதான அலட்சியங்கள்
எனக்கான மரணவாசல்கள்
ஏனிந்த ஒற்றாஇ நேசத்துக்காக‌
உலகமே சொற்பமானது
ஏனுனது அன்பிற்காய் மட்டும்
உறவுகள் கூட அற்பமானது?

இத்தனை வியாகுலங்கள் பொழியுமென்
இதயவேதனையை அற்பாமா யெண்ணாதே
உன் கோபங்களில் நான்
கல்லறைப் பிணமாய்...

No comments: