Thursday, March 24, 2016

அலைகள் தாளம் போடுது



அலைகள் தாளம் போடுது
அருகில் நீவந்து நின்றாலே
மலைகள் பாடல் பாடுது
மயக்கும் விழிகள் பட்டாலே...

பூக்கள் குலுங்கிச் சிரிக்குது
பூரிப்பு உனில் கண்டாலே
பாக்கள் கூடப் படிக்குது
பார்வையால் நீயெனை தொட்டாலே...

கருமேகம் காணாமல் போகுது
கலைவானம் நீயிங்கு வந்தாலே
தெருவெல்லாம் விழாக்கோலம் பூணுது
தெளிதமிழ்க் காதலாலெனை சுட்டாலே......




No comments: