Friday, March 4, 2016

நித்தம் நித்தம் வியக்கிறேன்



நினைவுகளை தொலைத்துவிட்டு
நிம்மதியாய் கழிக்கும் உன்
வழிமுறைகளெனக்கு ஆச்சரியம்....

நோகாமல் வலிகளைத்தந்து
ஓரமாயிருந்து சந்தோசிக்குமுன்
நடைமுறைகளென்னில் அதிசயம்...

பயப்படாத உன் திமிர் கண்டு
நித்தம் நித்தம் வியக்கிறேன்
ஊமையாகிப்போன விழிகளோடு....



No comments: