Saturday, March 5, 2016

பேசினாய்......பேசினாய்

கண்களால் கவிதை பேசினாய்
கவிதையால் காதல் பேசினாய்

காதலால் மெளனம் பேசினாய்
மெளனத்தால் வார்த்தை பேசினாய்

வார்த்தையால் வாழ்க்கை பேசினாய்
வாழ்க்கையால் வசந்தம் பேசினாய்

வசந்தத்தால் வழிகள் பேசினாய்
வழிகளால் நல் மனிதம் பேசினாய்

மனிதத்தால் மகிழ்வை தேடினாய்
மகிழ்வால் என் மனதில் வாழ்கிறாய்

மனதால் நம் நேசம் சேர்க்கிறாய்!!




No comments: