Tuesday, March 1, 2016

விழுது வாழ்வியலில்...

கரிய இருளுக்குள்
காணாமல் போன
சூரியனை தேடிக்கொண்டிருக்கின்றேன்...

பார்வையில் பழுதும் இல்லை
உறக்கநிலையில் நானுமில்லை ஆனாலும்
எல்லாமே கருமையாகவே......

இதற்கிடையில்

எப்போதும் புன்னகைக்கும்
என் னுதடுகள் அதிசயம்

எவரிடமும் புலம்பாத
என் நாவு மதிசயம்

எந்நிலையிலும் ஆறுதலுக்கலையா
என் அழுகைகளும் அதிசயந்தான்....

தொலைத்தல் பற்றிய
தெளிவில் நான்

துயரங்களின்
தொடர்ச்சியில் இவ்
வாழ்க்கைச்சங்கிலி

கட்டப்பட்டு வெட்டப்பட்டு
ஒட்டப்பட்ட என்னிதயம்
திட்டமிட்டு வட்டமடித்து
இறக்கை விரிக்குது

விழுந்து எழுந்து
அழுது புலம்பி
தொழுது பழுதான என்
விழுது வாழ்வியலில்
அழுத்தி சொன்னது
இதுவொன்றுதான்

கண்களை சரியாக்கிடு
கனவுகளை கதவாக்கிடு
உண்மையை உரமாக்கிடு

உயர்வுகளை உனதாக்கிடு.....

No comments: