Tuesday, March 8, 2016

எங்கிருந்து வந்தாய்

யாரடி நீ
எங்கிருந்து வந்தாய்
உனக்கு மெனக்கும் என்ன
எப்படி எனக் குறவானாய்
ஏன் போக மறுக்கிறாய்.....

நீ வெள்ளி நிலவு
நான் வேடிக்கை பார்ப்பவன்

நீ ஆகாயம்
நான் அண்ணாந்து பார்ப்பவன்

நீ தாமரை
நான் தரிசிக்க வந்தவன்...

வண்ண மயிலே என்னை
வதைக்காமல் போய்விடு

உனக்கு மெனக்கும்
உறவில்லை -என்
உணர்வுகளை வதைக்காமல்
ஒதுங்கிவிடு.....

நமக்கிடையில்
நல்லுறவொன்றுதான்
நெருங்காமல் போய்விடு....


நான் என்னை தொலைத்துக்கொண்டிருக்கிறேன்..!!

No comments: