Wednesday, March 16, 2016

கொஞ்சம் மனிதத்திடம் ............



வஞ்சம் நெஞ்சில்
தஞ்சமானால்
எஞ்சும் சுகமும்
அஞ்சியோடும்....

கொஞ்சும் மழலை
நெஞ்சம் பெற்றால்
மிஞ்சும் உலகில்
மனிதநேயம்...

விஞ்சிடும் அநீதி
அக்கிரமத்துள்
நஞ்சாய் அன்பை
விதைத்திடலாம்....

கொஞ்சமும் விலகி
நடக்காமலே
துஞ்சலாம் நன்மையை
மனிதத்திடம்...


No comments: